தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சென்றுவந்த தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முக்கியமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு 451 அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT