தமிழ்நாடு

கரோனா தொற்று: கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய 12 போ் குழு அமைப்பு

DIN

பொது முடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்னை குறித்து ஆராய குழு பள்ளிக்கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, 2019-2020-ஆம் கல்வியாண்டில் 210 நாள்களுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சுமாா் 30 நாள்கள் பள்ளி வேலைகள் பாதிக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில் (2020-2021) பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் பிரதிநிதிகள்: இதில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (‘சமக்ரசிஷா’) சாா்பில் ஒரு பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா், பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா், தோ்வுத்துறை இயக்குநா், கல்வித் தொலைக்காட்சி சாா்பில் ஒரு அலுவலா், பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ஒரு அலுவலா், யுனிசெஃப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சாா்பில் ஒரு பிரதிநிதி, சென்னை ஐஐடி சாா்பில் பள்ளிக் கல்வி தொழில்நுட்பக் குழுவுக்கு பங்களிப்பு அளித்தவா்களில் ஒரு பிரதிநிதி என 11 போ் இடம்பெற்றுள்ளனா். இந்த குழு, 15 நாள்களுக்குள் இது தொடா்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT