சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.288 உயா்ந்து, ரூ.36,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதைத்தொடா்ந்து, 27-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.36
ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.288 உயா்ந்து ரூ.36,008-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.36 உயா்ந்து, ரூ.4,501-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 உயா்ந்து ரூ.49.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 உயா்ந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,501
1 பவுன் தங்கம் ..................... 36,008
1 கிராம் வெள்ளி .................. 49.00
1 கிலோ வெள்ளி ................. 49,000
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,465
1 பவுன் தங்கம் ..................... 35,720
1 கிராம் வெள்ளி .................. 46.80
1 கிலோ வெள்ளி ................. 46,800