தமிழ்நாடு

விழுப்புரம் அருகே ஜன்னல் கம்பியை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி

DIN

விழுப்புரம் அருகேயுள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்திலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில், அதிகாலை வந்த மர்ம நபர்கள் வங்கியின் பக்கவாட்டு பகுதியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்துள்ளனர்.

சத்தம் கேட்டதால் அச்சம் அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதிகாலை வந்து பார்த்த வங்கி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இரவு பாதுகாவலர் நியமிக்கும்படி காவல்துறை அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT