வங்கக்கடலில் அம்பான் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. அம்பான் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கு-தென்கிலுக்கே 670 கி.மீ., தொலைவில் நிலைகெண்டுள்ளது.
இது நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்றும் 20ஆம் தேதி மேற்கு வங்கம், ஒடிசா அருகே அம்பான் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.