திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் இராணுவ இடத்தின் பிரச்னையால் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலர் ஏ.கார்த்திக் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இன்று ஜங்ஷன் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு..
திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறைச் செயலர் இன்று ஆய்வு செய்தார். மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கேட்டறிந்தார். மாற்று இடமாக தமிழக காவல் துறை இடத்தை இராணுத்திற்க்கு வழங்க இருப்பதாகக் கூறினார். அதற்கான திட்டம் வரையறுக்கப்பட உள்ளதாகவும் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.