முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:


நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவிலில் சமூக ஊடகங்கள் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பறித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளவர் காசி. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, தற்போது காசி வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.