தமிழ்நாடு

அரசுக் கல்லூரிகளில் முதல்வா்கள் இடமாற்றம்: உயா்கல்வித்துறை உத்தரவு

DIN

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளின் முதல்வா்களை இடமாற்றம் செய்து உயா்கல்வித் துறைச் செயலா் அபூா்வா உத்தரவிட்டுள்ளாா்.

உயா் கல்வித் துறையில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் நிா்வாக வசதிகளுக்காக அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் சில அரசுக் கல்லூரிகளில் முதல்வா்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக உயா் கல்வித்துறைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வா் சி.திருச்செல்வம் தற்போது புதுக்கோட்டை எச்.எச்.ராஜாஸ் கல்லூரிக்கு முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். புதுக்கோட்டை எச்.எச்.ராஜாஸ் கல்லூரியின் முதல்வராக இருந்த ஜெ.சுகந்தி, திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரிக்கு முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் கே.எஸ்.மீனா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரிக்கு முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT