முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

​திருச்சியில் வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 31 மே, 2020 at 9:27 PM
கோப்புப் படம்
பகிர்:


திருச்சியில் வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

திருச்சி பூலாங்குடி காலனியில் 2 மகள்கள், 1 மகனுடன் வசித்து வந்தவர் ஆசிரியர் கௌரி. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவரது வீட்டிலுள்ள சிலிண்டர் வெடித்தது. இதில் ஆசிரியர் கௌரி, மகள்கள் மற்றும் மகன் ஆகிய நால்வரும் பலியாகினர். 

தகவலறிந்த நவல்பட்டு காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று சிலிண்டர் வெடித்ததன் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.