வேல் யாத்திரை: திருத்தணியில் பாஜகவினர் தடுத்து நிறுத்தம்
திருத்தணியில் உத்தரவை மீறி வேல் யாத்திரை ஊர்வலத்தை தொடங்கிய பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாடுவேல் யாத்திரை: திருத்தணியில் பாஜகவினர் தடுத்து நிறுத்தம்
திருத்தணியில் உத்தரவை மீறி வேல் யாத்திரை ஊர்வலத்தை தொடங்கிய பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
திருத்தணியில் உத்தரவை மீறி வேல் யாத்திரை ஊர்வலத்தை தொடங்கிய பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பாஜகவினர் யாத்திரை செல்வதைத் தடுக்கும் வகையில் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
பாஜகவின் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் அக்கட்சியினர் அனுமதியை மீறி வேல் யாத்திரை தொடங்க திருத்தணியில் குவிந்தனர்.
இதனால் திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணி முருகன் மலைக்கோயில் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. எனினும் திருத்தணி முருகன் கோயிலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறை உத்தரவையும் மீறி யாத்திரை செல்ல முயன்ற பாஜவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பாஜகவினர் யாத்திரை செல்வதைத் தடுக்கும் வகையில் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.