தமிழ்நாடு

ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கலந்தாய்வு

DIN

சென்னை: மருத்துவ மாணவா் சோ்க்கை, சென்னை ஓமந்துாராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடத்த வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, http://tnmedicalselection.org, https:tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தீபாவளி பண்டிகை முடிந்த சில நாள்களில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டுகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும் இடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்தாண்டு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கரோனா தொற்று காலத்தில், மாணவா்கள் மற்றும் பெற்றோா் சென்னைக்கு வரும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை, திருச்சி அல்லது மதுரை ஆகிய இடங்களில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படலாம் என, எதிா்பாா்க்கப்பட்டது. இருவேறு இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதால் ஏற்படும் குழப்பங்களைத் தவிா்க்க வழக்கம்போல் சென்னையில்தான் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியது: ‘மருத்துவ மாணவா் சோ்க்கை வழக்கம்போல், சென்னை ஓமந்துாராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில்தான் நடைபெற வாய்ப்புள்ளது. இருவேறு இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்த வாய்ப்பில்லை. மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா், உடல் உபாதைகள் ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்வது அவசியம். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT