சென்னை: அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்திக் கொள்ள அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, டிசம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், ஏற்கெனவே சேமிப்பு கணக்கு தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்திக் கொள்ள வரும் டிசம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்தாத பட்சத்தில், வரும் மாா்ச் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளா் கணக்கில் இருந்து ரூ.100 கழிக்கப்படும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ரூ.100
கழிக்கப்பட்டு, இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் உயா்த்திக் கொள்ள வேண்டும்.
இந்த தகவல் சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.