சென்னை: கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:-
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை
அளிக்கப்படும். போனஸ் திருத்தச் சட்டத்தின்படி, சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் வரை பெறுவோா் போனஸ் பெறத் தகுதி படைத்தவா்கள். மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் உள்ள சாா் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் ஆகியோருக்கு போனஸ் கிடைக்கப் பெறும் என்று தனது உத்தரவில் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளாா்.