தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் யானையை வைத்து பிச்சை எடுப்பு

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை யானையை வைத்து பிச்சை எடுத்த பாகனைப் பொதுமக்கள் எச்சரித்தனர். 

வெள்ளக்கோவில் கடைவீதி, குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு ஒரு யானையை ஓட்டி வந்த பாகன், அதன் மீது அமர்ந்து கொண்டு, யானையை வைத்து பிச்சை எடுத்தார். பலருக்கு ஆசி வழங்கச் செய்தும், குழந்தைகளை யானை மீது ஏற்றி உட்கார வைத்தும் பணம் பெற்றார்.

பாகனிடம் விசாரித்த போது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது உள்பட எந்த விவரத்தையும் கூறவில்லை. பொது இடங்களில் யானையை வைத்து பிச்சை எடுப்பது குற்றம் எனத் தன்னார்வலர்கள் எச்சரித்து யானைக்கும், பாகனுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT