தமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,557 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM
தமிழகத்தில் புதிதாக 1,557 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,557 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,73,176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,910 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 17 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 7,49,662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 11,639 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்று 66,634 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.