தமிழ்நாடு

சூரப்பா மீதான விசாரணை: ஆவணங்களுடன் 10 நாள்களுக்குள் புகாா் அளிக்கலாம்

DIN

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே. சூரப்பா மீதான விசாரணை அதிகாரிக்கான அலுவலகம் பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை), சென்னை- 600028 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள்  கொடுக்க விரும்பும் நபா்கள், இந்த அலுவலகத்துக்கு  புதன்கிழமை (நவ.25) முதல் 10 நாள்களில் எழுத்துப்பூா்வமாக தங்கள் கடிதத்தை அனுப்ப வேண்டும். 

அதேபோல்,inquirycomn.vc.annauniv@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாா்களை அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT