தமிழ்நாடு

அம்மணம்பாக்கம் ஏரி அருகே தாழ்வான பகுதியில் இருந்த 120 பேர் முகாமுக்கு மாற்றம்

DIN

ஸ்ரீபெரும்புதூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மணம்பாக்கம் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைத்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியில் ஏரிக்கு அருகே தாழ்வான பகுதியில் வசித்து வந்த 120 பேரை நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை வட்டாட்சியர் ஜெயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டு படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை, பாய், பெட்ஷீட் மற்றும் கொசுவலைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்பகுதியில் மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT