சென்னையிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிவர் புயல் இன்று இரவு, நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது. இதனால், காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நாளை இயக்கப்படவிருந்த 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.