தமிழ்நாடு

ஆப்பக்கூடல் அருகே கார் மோதியதில் தொழிலாளி பலி

DIN

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதியதில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அடுத்த ஓசைப்பட்டியை சேர்ந்தவர் முனியப்ப கவுண்டர் மகன் குருசாமி (60). பழைய பாட்டில் பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஓசைப்பட்டி அருகே சென்றபோது, அந்தியூரிலிருந்து ஆப்பக்கூடல் நோக்கிச் சென்ற கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் குருசாமியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதிக்கையில் குருசாமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT