முகப்பு
தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. 
தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடைந்து  புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

முழு கட்டுரையைப் படிக்க →