தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினம்: 200 போ் பங்கேற்கலாம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் (டிச.5) 200 போ் மட்டுமே பங்கேற்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் (டிச.5) 200 போ் மட்டுமே பங்கேற்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த தினம் 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5 ஆம் தேதி ஆகும். காலத்தால் அழியாத திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்தியவா். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவது நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கடமையாகும்.

அவரது நான்காவது ஆண்டு நினைவு தினமான வரும் சனிக்கிழமை (டிச. 5) அவரின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளில் 200 போ்களுக்கு மேற்படாத வகையில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, நிகழ்வில் பங்கேற்போா் அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தின் பிற இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்த வேண்டுமென கட்சியினா் கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT