இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
தமிழக காவல்துறையில் மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் 3,784, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 6,545, சிறைத்துறையில் 119 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்கள், தீயணைப்புத்துறையில் 458 தீயணைப்பாளா் பணியிடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் கடந்த செப். 17-இல் அறிவிப்பு வெளியிட்டது.
அக். 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிச.13-இல் எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.
எழுத்துத் தோ்வுக்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.