தமிழ்நாடு

கூடலூர் காவல் நிலையம் சார்பில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூர் காவல் வட்ட அளவில் தெற்கு , வடக்கு மற்றும் குமுளி காவல் நிலையங்கள் உள்ளன.

இங்கு பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது இந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய ஞாயிற்றுக்கிழமை காவல் ஆய்வாளர் முத்துமணி தலைமையில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

 முகாமில் குமுளி, லோயர் கேம்ப்,வெட்டுக்காடு, இந்திரா நகர்,  கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

புகார் மனுதாரர்களிடம் காவல் ஆய்வாளர் முத்துமணி கூறும்போது நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT