தமிழ்நாடு

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.3.25 லட்சம் சைபர்கிரைம் பிரிவு மூலம் மீட்பு

DIN

சென்னை: ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.3.25 லட்சம் சைபர்கிரைம் பிரிவு மூலம் மீட்கப்பட்டு மீண்டும் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகரில், நடைபெறும் சைபர்கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே மாவட்டம்தோறும் புதிதாக சைபர்கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை  சைபர்கிரைம் பிரிவில் ஒரேநாளில் இரண்டு வழக்குகளில் துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு, ரூ.3.25 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் விசாரணை நடத்தி முடித்த அடையாறு சைபர் கிரைம் பிரிவு காவல் ஆளிநர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT