தமிழ்நாடு

நாகையில் பாஜக அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: கட்சியினர் முற்றுகை

DIN

நாகையில், பாஜக அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாகை, காடம்பாடி பகுதியில் பாஜக நாகை தெற்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கான மின் கட்டணம் கடந்த சில மாதங்களாகச் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் மின்சார வாரிய ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மின் இணைப்புத் துண்டித்துள்ளார்.

இந்தத் தகவல் பாஜகவினருக்கு புதன்கிழமை தெரியவந்துள்ளது. இதையடுத்து பாஜக மாநிலச் செயலாளர்  தங்க வரதராஜன், நாகை தெற்கு மாவட்டுத்தலைவர் நேதாஜி மற்றும்  கட்சியினர் புதன்கிழமை   மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று அங்குப் பணியிலிருந்த அலுவலர்களுடன், மின் இணைப்பு துண்டிக்கான காரணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் உதவிப் பொறியாளர் அருண், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மின்கட்டணத்தைக்  காலதாமதமின்றி செலுத்துமாறு பாஜகவினரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாஜகவினர் முற்றுகையைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT