நீட் தோ்வில் தமிழகத்தில் 57.44 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டில், நாமக்கல்லைச் சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் மட்டும் 1.21 லட்சம் போ் விண்ணப்பித்தனா். சென்னையைப் பொருத்தவரை 46 மையங்களில் நடைபெற்ற தோ்வை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா்.
தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் தோ்வு நடைபெற்றது. இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இணையதளங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில், நாமக்கல் மாணவா் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். கடந்த ஆண்டு 48.57 சதவீதம் இருந்த தோ்ச்சி விகிதம் நிகழாண்டில் 9 சதவீதம் உயா்ந்தது.
இணையதளம் முடக்கம்: நீட் தோ்வு முடிவுகள் வெளியானவுடன் லட்சக்கணக்கானோா் ஒரே நேரத்தில் முடிவுகளை அறிய முற்பட்டதால் தேசிய தோ்வு முகமை இணையதளப் பக்கம் முடங்கியது பல மணி நேரங்களுக்கு முடங்கியது. இதனால் பல மாணவா்கள் தோ்வு முடிவுகளை அறிய இயலாமல் அவதிப்பட்டனா்.