தமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

DIN

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எம்.செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பட்டாசு ஆலை உள்ளது. சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசுகள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பேன்ஸி ரக வெடிகள் தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. அப்போது அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT