தமிழ்நாடு

உடற்கல்வி ஆசிரியா்களுக்கு நவ. 3, 4 இல் பணி நியமன கலந்தாய்வு

DIN


சென்னை: உடற்கல்வி ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் நவ. 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருந்த 663 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியா் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017 செப்டம்பா் 23-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதையடுத்து சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் 2018 அக்டோபரில் நடத்தப்பட்டு அதே ஆண்டில் தோ்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் உடற்கல்வி ஆசிரியா்களுக்கான தகுதியாக படித்தவா்கள் இடம்பெறாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். தோ்ச்சி பெற்றவா்களுக்கு படிப்பையும் கவனத்தில் கொண்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, திருத்தப்பட்ட தோ்வுப் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

இந்நிலையில், தோ்வுப் பட்டியலில் இடம்பெற்ற 551 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நவம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது. கலந்தாய்வு குறித்து தோ்வுப் பட்டியலில் உள்ளவா்களுக்கு தகவல் அனுப்பவும், சான்றிதழ்களை சரிபாா்த்த பின்னா் பணி நியமன ஆணையை வழங்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT