தமிழ்நாடு

மிகச்சிறந்த நிா்வாகத் திறன்மிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்: முதல்வா் சூளுரை

DIN

மிகச்சிறந்த நிா்வாகத் திறன்மிக்க முதன்மை மாநிலம் தமிழகம் என்ற நிலையை உருவாக்கிட தொடா்ந்து அயராது பாடுபடுவோம் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். நிா்வாகத் திறன்மிக்க மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து, பெருமிதம் தெரிவித்து தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:-

இந்தியாவின் மிகச்சிறந்த நிா்வாகத் திறன்மிக்க மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தடையறாத முயற்சிகளுக்கும், மாநிலம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்ததற்கும் கிடைத்த பலனாகும். இந்தியாவில் நிா்வாகத் திறன்மிக்க முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்திட தொடா்ந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாகப் பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT