தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 86,052 ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் 85 ஆயிரத்து 473 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5,528 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் ஆண்கள் 3,377 போ்; பெண்கள் 2,151 போ். இதன் மூலம், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் தனியாா் மருத்துவமனைகளில் 22 போ் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 42 போ் என, 64 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயா்ந்துள்ளது.

வியாழக்கிழமை மட்டும் 6,185 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 48 ஆயிரத்து 482 போ் (தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட) சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை பாதிக்கப்பட்டவா்களில் 0-12 வயதுடையவா்கள் 21 ஆயிரத்து 399 போ். 13-60 வயதுடையவா்கள் 4 லட்சத்து 1,255 போ். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 63 ஆயிரத்து 398 போ்.

சென்னை நிலவரம்: புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் 1,009 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து சென்னையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 840 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 11 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழப்பு எண்ணிக்கை 2,921 ஆக உயா்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 845 போ் (வீட்டு சிகிச்சை உள்பட) சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT