முகப்பு
தமிழ்நாடு

இறந்த மனைவியின் நினைவாக சிலை அமைத்த கணவர் 

இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன். இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆக. 8 ஆம் தேதி மரணம் அடைந்தார். தன் மனைவி மீது கொண்ட தீரா பாசத்தினால் சேதுராமன், அவரது உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார். 

உடனடியாக வில்லாபுரத்தைச் சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோர் மூலமாக பைபர் மெட்ரியலை கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் தனது மனைவி சிலையை 22 நாளில் தத்ரூபமாக வடிவமைத்தார். 

இதையடுத்து தனது மனைவி இறந்து 30ஆம் நாளில் அவரது தத்ரூப சிலையை வைத்து சேதுராமன் வழிபாடு செய்தார். 

படம்: கே.கே. சுந்தர்

முழு கட்டுரையைப் படிக்க →