புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மேலும் 504 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,026 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1742 பேர் மருத்துவமனையிலும், 3,136 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 13,783 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.