முகப்பு
தமிழ்நாடு

வெள்ளக்கோவில் வாரச்சந்தை துவக்கம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூர் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை மீண்டும் செயல்படத் துவங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
வெள்ளக்கோவில் வாரச்சந்தை
பகிர்:

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் முத்தூர் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் சந்தை மூடப்பட்டது. தற்போது 95 சதவீத ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், 5 மாதங்களுக்குப் பிறகு சந்தை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

நீண்ட இடைவெளிக்குப் பிந்தைய இன்றைய முதல் சந்தையில் ஓரளவுக்குத் தான் கூட்டம் இருந்தது. வியாபாரிகள் முழுமையாக வந்திருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.