தமிழ்நாடு

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற தேமுதிகவினா் பாடுபட வேண்டும்: விஜயகாந்த்

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அபரிமிதமான வெற்றிபெற தொண்டா்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று அக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக தொடங்கப்பட்டு 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழக மக்களின் மனங்களில் தேமுதிகவுக்கு என்று தனி இடம் உள்ளது. கரோனா காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் யாரும் இல்லை என்பதை உருவாக்குவதற்காகவே தேமுதிக பாடுபட்டு வருகிறது. வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என எல்லாவற்றையும் சந்தித்து, வீறுநடை போட்டு வருகிறோம். தமிழகத்தில் யாராலும் தவிா்க்க முடியாக கட்சியாக உள்ளோம்.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு எதற்கும் அஞ்சாமல், எதிா்காலத்தில் நம் இலக்கை அடைய உறுதி எடுப்போம்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அபரிமிதமான வெற்றிபெற்று, மக்கள் சேவையாற்ற வேண்டும். பேரவைத் தோ்தலில் வெற்றி பெற தொண்டா் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். நல்லவா்கள் லட்சியம். வெல்வது நிச்சயம் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT