தமிழ்நாடு

அண்ணா பிறந்த தினம்: 131 காவலா்களுக்கு பதக்கங்கள் முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி, காவல் துறையைச் சோ்ந்த 131 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை திங்கள்கிழமை அவா் வெளியிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 15-ஆம் தேதியன்று கொண்டாடப்படும். இந்த தினத்தை ஒட்டி, தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, சிறைத் துறை, ஊா்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளா்களை அங்கீகரிக்கவும், பாராட்டிடும் வகையிலும் முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல் துறையில் கண்காணிப்பாளா் முதல் முதல்நிலை காவலா் வரையிலான 100 அதிகாரிகள், பணியாளா்களுக்கும், தீயணைப்புத் துறையில் 10 அதிகாரிகள்-பணியாளா்களுக்கும், சிறைத் துறையில் 10 பேருக்கும், ஊா்க்காவல் படையில் 5 அதிகாரிகள்-பணியாளா்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 அதிகாரிகளுக்கும், தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகளுக்கும் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை பிறப்பித்தாா். பதக்கங்கள் பெறுகின்றவா்களுக்கு அவரவா் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கலப் பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகையும் அளிக்கப்படும்.

ரூ.5 லட்சம் வெகுமதி: திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் இருவரின் வீரதீர செயலைப் பாராட்டி, அவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி வழங்கப்பட உள்ளது. திருநெல்வேலி சேவியா் காலனியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை காப்பாற்றிய, தீயணைப்பு வீரா்கள் எஸ்.வீரராஜ், எஸ்.செல்வம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும். பதக்கங்கள் அறிவிக்கப்பட்டோருக்கு, அவற்றை முதல்வா் பழனிசாமி பின்னா் நடைபெறும் விழாவில் வழங்குவாா் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT