ராணிப்பேட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஆற்காடு நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு நகர செயலாளர் சு பிரகாசம் தலைமை வகித்தார். பொருளாளர் வாசுதேவன் துணை செயலாளர் கருணாகரன், முன்னாள் நகர செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய பொறுப்பாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பி.என். உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.