முகப்பு
தமிழ்நாடு

3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

தமிழகத்தில் 3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
பகிர்:

தமிழகத்தில் 3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. 

இதன்படி சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்கடன், புதுக்கேட்டை அரசு பி.எட். கல்லூரி, குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரி ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விதிகளை பின்பற்றாததால் 3 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, குறைபாடுகளை சரிசெய்து 3 மாதத்தில் ஆவணத்தை சமர்பிக்க வேண்டும், அதுவரை தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.