தமிழகத்தில் கரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவக் கவுன்சில் 
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவக் கவுன்சில்

தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் 

ENS


சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை கரோனா பாதித்து 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கும் இந்திய மருத்துவக் கழகம், அவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவர்களது குடும்பத்தினரும் பிள்ளைகளும் மத்திய அரசிடம் இருந்து ஆறுதலையும் நிவாரணத்தையும் பெறத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கரோனாவால் பலியான மருத்துவப் பணியாளர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, அதுபற்றிய புள்ளி விவரம் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT