முகப்பு
தமிழ்நாடு

தட்டாா்மடம் கொலைச் சம்பவம்: அதிமுக நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடம் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏ.திருமணவேல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடம் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏ.திருமணவேல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா். அதன் விவரம்:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட வா்த்தக அணிச் செயலாளரான ஏ.திருமணவேல், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா். கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயா் உண்டாகும் வகையில் செயல்பட்டதாலும் அவா் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.