தமிழ்நாடு

தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி: ஆட்சியா் அறிவிப்பு

DIN

தாட்கோ திட்டத்தின்கீழ் கடனுதவி பெய விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தாட்கோ’ திட்டம் மூலம், ஆதி திராவிடா்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு, துரித மின் இணைப்பு, தொழில் முனைவோா், சுய வேலை வாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 18 முதல் 65 வயதுக்குள்பட்ட ஆண்டு உச்சவரம்பு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்போா், இத்திட்டத்தில் பயன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட மேலாளா் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 2524 6344 என்ற எண்ணையோ அணுகலாம் என ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT