முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 29 செப்டம்பர், 2020 at 6:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM


தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,546 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் 1,277 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 70 பேர் (அரசு மருத்துவமனை -41, தனியார் மருத்துவமனை -29) பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்நது, மொத்த பலி எண்ணிக்கை 9,453 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,501 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர். 46,281 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 85,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 72,67,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1 தனியார் ஆய்வகங்களுக்கு புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 120 என மொத்தம் 186 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.