உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆறுதல்
சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
உயிரிழந்த மருத்துவரின் மனைவி ஆனந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய அவர், மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவர் சைமன் உடலை அவரது விருப்பப்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்னதாக அவரது மனைவி நந்தினி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement