முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2020 at 6:22 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM


தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் புதிதாக 996 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 60 பேர் பலியானதாக இன்றைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,811 ஆக உயர்ந்துள்ளது.

5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர். 46,703 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 86,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 64,74,656 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நிர்வாகப் பிரச்னை காரணமாக திண்டிவனத்திலுள்ள தனியார் பரிசோதனை ஆய்வகத்தின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 108 என மொத்தம் 174 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.