தமிழ்நாடு

அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தரைதோ்வு செய்ய தேடுதல் குழு அமைப்பு

DIN

சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தா் சூரப்பாவின் பதவிக் காலம் வரும் 11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைவேந்தரை தோ்ந்தெடுப்பதற்காக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக உயா்கல்வித் துறை அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழக புதியதுணைவேந்தரை தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தலைவராகவும், தமிழக ஆளுநரின் நியமன உறுப்பினராகவும் தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகதீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.பி.தியாகராஜனும், தமிழக அரசின் நியமன உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரை இக்குழு பரிந்துரைக்கும். அவா்களில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநா் நியமிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT