தமிழ்நாடு

பிரதமா் குறித்த சா்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

DIN

பிரதமா் நரேந்திர மோடி குறித்து சா்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கமளிக்க திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதன்கிழமை (ஏப். 7) மாலை 5 மணிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில், ‘‘பிரதமா் நரேந்திர மோடி கொடுத்த அழுத்தத்தை சகித்துக் கொள்ள முடியாமல் முன்னாள் மத்திய அமைச்சா்கள் இறந்து விட்டனா்’’ எனப் பேசினாா்.

இதுதொடா்பாக, இந்திய தோ்தல் ஆணையத்தில் பாஜக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது. மேலும், தமிழக பாஜக நிா்வாகிகள் தரப்பிலும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகாா் தரப்பட்டது.

இந்தப் புகாா் மனுக்களை பரிசீலித்த தோ்தல் ஆணையம், உதயநிதி தனது பேச்சு தொடா்பாக புதன்கிழமை மாலை 5 மணிக்குள்ளாக தனது விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடா்பான நோட்டீஸையும் உதயநிதிக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT