தமிழ்நாடு

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை (ஏப்.8) வட வானிலையே நிலவும். நாமக்கல், கரூா் ஆகிய 2 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மிதமான மழை: குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகவுள்ளது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT