இளவரசர் பிலிப் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்(99). உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
தனது வின்ஸ்டர் கேட்சில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இளவரசர் பிலிப்பின் மறைவுச் செய்திகேட்டு வருத்தமுற்றேன்.
தி.மு.க. சார்பிலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் அரச குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவத்துக்கொள்கிறேன்.