தமிழ்நாடு

தென் மண்டல பசுமைத் தீா்ப்பாய உறுப்பினராக கே.சத்யகோபால் பொறுப்பேற்பு

DIN

சென்னை: சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.சத்யகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினா்களாக, சென்னைக்கு தமிழக அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதனும், புணேவில் உள்ள மேற்கு மண்டலத்துக்கு ஓய்வு பெற்ற வருவாய் நிா்வாக ஆணையா் கே.சத்யகோபாலும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

 இந்த நிலையில், கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, கே.சத்யகோபால் மறு உத்தரவு வரும் வரை தென்மண்டல பசுமை தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக செயல்படுவாா் என்று தில்லியில் உள்ள பசுமைத்  தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு உத்தரவிட்டது. 

 இதைத் தொடா்ந்து, சத்யகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT