தமிழ்நாடு

மதுரை சித்திரை விழா: பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் பாதுகாப்பது எப்படி? உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களை பாதுகாப்பது யார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சித்திரை திருவிழாவின் போது பக்தர்களுக்கு அனுமயில்லை என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா 2வது அலை மிக வேகமாக பரவுவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கினால் அவர்களைப் பாதுகாப்பது யார், பாதுகாப்பது எப்படி? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்ததாண்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ் என எதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT