மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா
நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
அங்குள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் 147 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில் 47 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.